இது வரைக்கும் 8 பேரினது தகவல்களை புலனாய்வுத்துறை திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அவர்கள் கொழும்பு , திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலிருந்து குறித்த ஆயுததாரிகளுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் கலேவெல பிரதேசத்தில் சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது
அவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கா செல்வதாகக் கூறி குறித்த பாடசாலையிலிருந்து விலகிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது