மட்/பட்/மண்டூர் 14 அ.த.க.பாடசாலை பரிசளிப்புவிழாவும் 'ஏத்து' சஞ்சிககை வெளியீடும்

மட்ஃபட்ஃமண்டூர் 14 அ.த.க.பாடசாலை பரிசளிப்புவிழாவும் 'ஏத்து' சஞ்சிககை வெளியீடும் 17 வியாழன் மு.ப 10.00 மணியளவில் அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக  அதிதிகள் வரவேற்கப்பட்டனர் பின்னர் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் தேசிய கொடி, தேசிய கீதம் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டபின் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன வரவேற்பு உரையினை பிரதி அதிபர் சண்முகம் அவர்களும் தலைமை உரையினை அதிபர் எஸ்.புஸ்பராசா அவர்கள் நிகழ்த்தினார் அவர் தனது தலைமையுரையில் தான் அதிபராக இந்தப் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்ததில் இருந்து தற்போது பாரிய மாற்ரங்களுடன் வளர்ச்சியடைந்து இருப்பதாகவும் தனது உரையில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய இந்த நிகழ்வில் இதுவரைகாலமும்; வலய மற்றும் மாவட்ட,மாகாண மட்டரீதியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு பாரிசில்கள் சான்றிதழ்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு  ; 'ஏத்து' சஞ்சிககை ஒன்றும் வெளியிடப்பட்டது. இன்நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக முதன்மை அதிதியாக கௌரவ.சி.தண்டாயுதபாணி (கல்வி,காணி.காணி அபிவிருத்தி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் விசேட அதிதியாக காத்தீபன் (திட்டமிடல் பணிப்பாளர்;) சிறப்பு அதிதிகளாக க.துரைநாயகம்(பொருளாளர் சுவிஸ் உதயம் அமைப்பு) பூ.பாலச்சந்திரன்(கோட்டைக்கல்விப்பணிப்பாளர் போரதீவுப்பற்று) கௌரவ அதிதிகளாக சி.ஜெயக்குமார் (கல்வி திட்;ட இணைப்பாளர் வேள்ட் விஷன்) மு.விமலநாதன் (ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளரும்,கிழக்குமாகாண சுவிஸ் உதயம் தவிசாளரும்) பாவாணர்-அக்கரைப்பாக்கியன் (கிழக்கு மாகாண சுவிஸ் உதய உபதலைவர்) அதிபர்கள்(போரதீ கல்விக் கோட்டம் அழைப்பு அதிதிகள் பழைய மாணவர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் கிராம அபிவிருத்திச்சங்கம் விளையபட்டு கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள், கலந்து கொண்டர்

முதன்மை அதிதி அதி விசேட அதிதி சிறப்பு அதிதிகள் கௌரவ அதிதிகள் ஆகியோர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தினர் இறுதியாக ஆசிரியர் கே.ரமேஸ் அவர்களின் நன்றியுரையுடன் இன் நிகழ்வு நிறைவு பெற்றது.











Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin