எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போது தேர்தல் பணிகளில் 2லட்சம் அரச ஊழியர்கள் ஈடுபடவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் மாத்திரம் சுமார் 120000 அரச ஊழியர்களை பணியில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் தற்பொழுது மாவட்ட மட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர தேர்தல் பணிகளுக்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.