மட்டக்களப்பில் வரலாற்று சிறப்புமிக்க ஆறுமுகத்தான் குடியிருப்பு சிறி பத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்குற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆறுமுகத்தான் குடியிருப்பு சிறி பத்திரகாளி அம்மன் 67வது ஆண்டு வருடாந்த சடங்குற்சவம் இன்று புனித தீமிதிப்பு சடங்குடன் இனிதே நிறைவு பெற்றது
கடந்த 21.07.2015 திங்கக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூசைகளும் அருள் வாக்கு வழங்கலும்; இடம் பெற்று வந்தது
கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2015) கலியாணக்கால் வெட்டும் நிகழ்வுகவும் சனிக் கிழமை (25.07.2015) நெல் குற்றுதல் மடைப்பெட்டி சடங்கு என்பனவும் இடம் பெற்று (26.07.2015) இன்று அதிகாலை விநாயகப்பானை எழுந்தருளல் பண்ணலும் பள்ளயமும் அம்மனின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தீமிதித்தல்; மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
இதனை தொடர்ந்து அம்மனுக்கு பூத்தூவும் நிகழ்வு இடம்பெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு சடங்கு மகாஉற்சவம் இனிதே நிறைவு பெற்றது

















Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin