இது தொடர்பான நிகழ்வு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்புனித நிகழ்வில் மறைமானில் ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்களால், ஆயராக அதி வணக்கத்துக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவல் அவர்களை திருனிலைப்படுத்தப்பட்டார்.
நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மறை மாவட்ட ஆயர்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் என 500க்கும் மேற்பட்டவர்களுடன் 6000க்கும் அதிகமாக பொது மக்களும் கலந்து கொண்டார்கள். திருகோணமலை மாவட்டத்தின் முக்கியப்பிரமுகர்கள் பங்கேற்றதுடன் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.
கொழும்பு மறை மாவட்ட மேற்றிரானியர் கலாநிதி மல்கம் ரஞ்சித் பெர்ணாண்டோவும் இதில் கலந்த கொண்டார்.
Post a Comment