அந்த அமைப்பின் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை என்பது சிங்கள நாடு. காலங்காலமாக சிங்கள அரசியல் தலைமைகள் அற்பசொற்ப அரசியல் ஆசைகளுக்காக சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு அரசியல் ரீதியாக பாரிய இடமளித்துள்ளனர். என்ன நடந்துள்ளது இன்று? சிங்கள இனத்தின் உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளன.
இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் தலைத்தூக்கியுள்ளதாகக் கடந்த காலங்களில் நாங்கள் தெரிவித்தோம். ஆனால், எங்களை இனவாதிகள் என வாயை அடைத்தனர். உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருந்த இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் சிரியாவில் வான்வெளித் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகின்றது?
பேருவளை, காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி,மூதூர் போன்ற இடங்களில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் காணப்படுவதாக ஒரு சில முஸ்லிம் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கூட மதராஸாக்கள் அதிகளவில் மூடப்பட்டுள்ளன. அதில் இஸ்லாமிய மார்க்கத்துக்கெதிரான கொள்கைகள் படிப்பிக்கப்படுவதனால் அவை மூடப்பட்டுள்ளன. ஆனால், சவூதி அரேபியாவின் பணக்கொடுப்பனவுடன் இலங்கையில் நாளுக்கு நாள் மதராஸாக்கள் விருத்தியடைந்து வருகின்றன.
உலகில் 1,500 மில்லியன் முஸ்லிம் மக்கள் காணப்படுகின்றனர். முஸ்லிம்களின் அபிவிருத்திக்காகப் பாடுபடும் முஸ்லிம்களின் பட்டியலில் ரிஷாத் பதியதீன் 500ஆவது இடம். எனவே, இந்த நாட்டை இன்று முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளன. இந்தத் தீவிரவாத அமைப்புகள் தொடர்பில் உடனடியாகத் தேடி அவற்றை தடைசெய்யவேண்டும். இல்லாவிடின் இந்த நாட்டில் வாழும் சிங்களவர்களின் உரிமைகள் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.