கருணாவை ஐ.தே. கட்சியில் சேர்க்கமாட்டோம்;எல்லாம் கருணா பரப்பும் புரளியே - அ.சசிதரன்

கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமாகிய அரசரெட்ணம் சசிதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் சில ஊடகங்களில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்,  ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பாக வெளியான செய்தி முற்றுமுழுதாக பொய்யான கூற்று. கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைவது தொடர்பாக வெளியான செய்தி குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மேல் இடத்தில் நான் கேட்டபோது அது தொடர்பாக கதைக்கவும் இல்லை, பேசவும் இல்லை.

இது தொடர்பில் இன்று  பிரதமர் காரியாலயத்தில் கேட்ட போது அப்படியொன்றும் நடைபெறவில்லை என்பதை முற்றாக மறுத்து இருக்கின்றது.

எதிர்வரும் தேர்தலில் ராஜபக்சாவுக்கு உதவி செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் அளிக்கபோகும் வாக்குளை மறைமுகமாக தடுப்பதற்காகவே கருணா இவ்வாறான செய்தியை வெளியிட்டு வருகிறார்.  எந்த விதத்திலும் மக்கள் இவ்வாறான செய்தியினால் குழப்பமடைய வேண்டாம்.



கருணாவை தமிழ் மக்கள் கணக்கே எடுப்பதில்லை, ஐக்கிய தேசிய கட்சியில் இவர் இணையப்போவதுமில்லை, இவருக்கு செய்யப்போதுமில்லை. மறைமுகமாக இருந்து கொண்டு ராஜாபக்சாவின் தேர்தல் வெற்றிக்காக ஆதரவு கொடுத்து வருகின்றார். தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்வதோடு ஐக்கிய தேசிய கட்சிக்கும் கருணாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin