தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் ;ஆரூடம் கூறியவரால் கடும் ஆத்திரத்தில் மகிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என ஆரூடம் கூறிய ஜோதிடர் பீ.டி பெரேரா, பொதுத் தேர்தலிலும் மஹிந்த தோல்வியடைவார் என ஊடகங்களில் கூறி வருகிறார்.

இதனால், கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ள மஹிந்த ராஜபக்ச தரப்பு ஜோதிடரின் வாயை மூடவைக்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக தெரியவருகிறது.

ஜோதிடர் பீ,டி. பெரேரா, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தும் வகையில், மகிந்த தரப்பு பெண்ணொருவரை தயார்ப்படுத்தியுள்ளது.



இந்த பெண், அடுத்த சில தினங்களில், ஜோதிடர் பெரேராவுக்கு எதிராக காவற்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபர்கள் பிணையில் வெளியில் வர முடியாது என்பதால், அதன் மூலம் தேர்தல் முடியும் வரை ஜோதிடரின் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என மஹிந்த தரப்பு எண்ணியுள்ளது.



கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைவார் என ஜோதிட ஆரூடம் கூறிய பெரேரா, ராஜபக்சவினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதுடன் அவரது வீட்டின் மீதும் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin