த.தே.கூ.வின் விஞ்ஞாபனம் வரும் 25ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது!


பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் எதிர்வரும் சனிக்கிழமை (யூலை 25) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும்  இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ். உடுவில்  மருதனார் மடத்தில் நடைபெறும் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin