விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது

விடுதலைப்புலிகளின் கோட்பாடு இன்னமும் உயிருடன் உள்ளது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் முற்றாக மறுக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin