மகிழூர்முனை சக்தி வித்தியாலய மாணவர்கள் ஆயுள்வேத மூலிகைகளை பார்வையிடல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின்  பட்டி ருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் மகிழூர்முனை சக்தி வித்தியால மாணவர்களின் ஒரு தொகுதியினர் 21.07.2015 அன்று  செவ்வாய்க்கிழமை அன்று மகிழூர்முனை 110பி கிராமத்தில் கணபதிப்பிள்ளை மாணிக்கப்போடி அவர்களின் வீட்டுத்தோட்டத்தில் ஆயுள்வேத மூலிகைகள் பார்வையிட்டனர்.இக்கிராமம் விவசாய கிராமாக இருந்தாலும் இவர்  மூலிகை மற்றும் நாற்றுமேடையினை உருவாக்கி உற்பத்திகளை மேற்கொள்கிறார்.

மூலிகைகள் எமது சுற்றுப்புற சூழலில் காணப்பட்டாலும் அதை அடையாளம் காண்பது எளிதான விடயம் அன்று ஆனாலும் இவரது தோட்டத்தில் முன்னூறு வகையான மூலிகைகள் காணப்படுகின்றது. இவரது  மூலிகைத் தோட்டத்தினை கடந்த காலங்களில் பல கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அதுமட்டுமின்றி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பொருட்காட்சி நிகழ்வில் இவரது மூலிகைகள்  இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin