காத்தான்குடி முஸ்லிம் பகுதி வேட்பாளர்களின் கவனத்திற்கு ...முஸ்லிம் வாக்கு அனைத்தும் எனக்கே - பிள்ளையான்

மட்டக்களப்பில் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட வரலாற்றை மாற்றி, முஸ்லிம்களின் வாக்கினால் தமிழன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டான் என்ற வரலாற்றை ஏற்படுத்துவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தமிழ்த்தரப்பு பிரதான வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

வாகரை கண்டலடி மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டபோது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எனது வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் புள்ளிவிபரங்கள் தெரியாமல் மக்களைக் குழப்புகின்றார்கள்;. புள்ளி விபரங்கள் தெரியாமல் போலிப்பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்ப ஓர் கூட்டம் அலைகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில்,
இடம்பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலானது அனைவரினது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்வாக்குச் செலுத்திய அரசியல் பிரபல்யங்கள் தனித்தனிக் கட்சிகளிலே போட்டியிடுகின்றமை ஓர் விசேட அம்சமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் மற்றும் கடந்த கால அரசியல் போக்குகள் தெரியாத ஒரு சில வேட்பாளர்கள் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு மட்டக்களப்புத் தமிழ் மக்களைத் திசை திருப்ப முனைகின்றனர்.



மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடுகின்ற பலமான கட்சிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன திகழ்கின்றன.

இதிலே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தமிழர் தரப்பில் பிரதான வேட்பாளராக நானும், முஸ்லிம்கள் சார்பில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்களும்; எனது சார்பில் தமிழ் வேட்பாளர்கள் நால்வரும், முஸ்லிம்கள் சார்பில் இருவருமாக 08 பேர் போட்டியிடுகின்றார்கள்.
இவ்வாறான தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் குறிப்பாக எனது வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள் தற்போது தமிழ் மக்கள் மத்தியிலே ஓர் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்கள்.

அதாவது, தமிழ் மக்களாகிய நீங்கள் பிள்ளையானுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்;கும் ஹிஸ்புல்லாவிற்கே சேரும், அவர்தான் தமிழர்களின் வாக்கில்; nதிவு செய்யப்படப்; போகின்றார் என்ற உண்மைக்கு புறம்பான எந்தவொரு நியாயப்பாடுகளும் ஆதாரமும் அற்ற செய்தியைப் பரப்பி வருகின்றார்கள். வெளிப்படையாகச் சொல்லப் போனால் எனது வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் புள்ளிவிபரங்கள் தெரியாமல மக்களை குழப்புகின்றார்கள்.

கடந்த கால தேர்தல்களிலெல்லாம் பெரும்பாலும் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் எல்லாமே ஒரே குடையின் கீழ் நின்று தமிழர்களின் வாக்கிலே தெரிவான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இன்று அவ்வாறில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலே முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்கள் ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி என்பனவாகும். இதிலே ஒவ்வோர் பிரதேசத்திற்கும் ஒவ்வொரு முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் ஓட்டமாவடியைப் பிரதிநித்துவப்படுத்தி அமீர்அலியும், ஏறாவூரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அலிசாகிர் மௌலானாவும், காத்தான்குடியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஹிஸ்புல்லாவும் பிரதான அரசியல் தலைவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலிலே ஒரே சின்த்தின் கீழ் அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டடைமப்பில் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டார்கள். நானும் அதே சின்னத்தில் அவர்களுடன் போட்டியிட்;டேன். அப்போது வந்த முடிவுகளின் பிரகாரம் நான்தான் அதிகப்படியான 22,338 விருப்பு வாக்குகளைப் பெற்றேன். அமீர்அலி 21,271 விருப்பு வாக்குளைப் பெற்றார். காத்தாண்குடி சிப்லி பாருக் 20,407 விருப்பு வாக்குகளையும், மௌலானா11,517 விருப்பு வாக்குகளையும் பெற்றனர்;.
ஆனால் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இவ்வாறான நிலை இல்லை. மாறாக, மேலே குறிப்பிட்ட 3 முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தனித்தனியே வௌ;வேறு கட்சிகளிலே போட்டியிடுகின்றார்கள். அதாவது, ஹிஸ்புல்லா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிலைச் சின்னத்திலும், அமீர் அலி ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்திலும், மௌலானா முஸ்லிம் காங்கிரசில் மரச் சின்னத்திலும் போட்டியிடுகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களின் வாக்கு 89,000மாகக் காணப்படுகின்றது. காத்தான்குடியிலே 33,000. ஏறாவூரிலே 23,000 ஓடட்மாவடியிலே 33,000 காணப்படுகின்றது.

இந்நிலையிலே தற்போது முஸ்லிம்கள் மத்தியிலே அவர்களுக்குள்ளே போட்டி ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான சூழலிலே எனக்கும், ஹிஸ்புல்லாவுக்கும்தான் போட்டி நிலவும். காத்தான்குடியிலே இருக்கின்ற 33,000 வாக்குகளிலே அளிக்கப்படுகின்ற வாக்குகள் சுமார் 25,000 ஆகும். இதிலே ஹிஸ்புல்லா எத்தனை பெறுவார்? இவரை விட நான் எத்தனை பெறுவேன்? என்பதுதான் கேள்வியாகும்.

எனக்குத் தனியான ஓர் வாக்கு வங்கி இருக்கிறது என்பதனை கடந்த கால தேர்தல் முடிவுகளின் வாயிலாக நிருபித்திருக்கின்றேன். அதேவேளை இம்முறை நான் முதல் முதலாக நாடாளுமன்றத் தேர்தலிலே போட்டியிடுகின்றேன். பெரும்பாலான மட்டக்களப்பை நேசிக்கின்ற மக்கள் என்னை நாடாளுமன்றம் அனுப்புவதற்காக உறுதியாக வேலை செய்கின்றார்கள்.

நிச்சயமாக வெற்றிலைச் சினனத்திலே அதிகப்படியான வாக்குகளை நானே பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவேன். புள்ளிவிபரங்கள் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கூறுவது போன்று நான் பெறுகின்ற வாக்குகளினால் முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட முடியாது.

கடந்த மாகாண சபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 3 முஸ்லிம் தலைமைகளும் ஒரே கூடையின கீழ்; நின்றபோதும் கூட, நான் 22,338 விருப்பு வாக்குகளைப் பெற்று முதன்மையானேன். ஆனால் தற்போது வெறுமனே ஒரே ஒரு தலைவர்தான் என்னுடன் போட்டியிடுகின்றார். எனவே அவரை விட ஒரு வாக்கேனும் அதிகமாகப் பெற்று கடந்த கால அரசியல் வரலாற்றை இம்முறை மாற்றியே தீருவேன். அதாவது கடந்த காலங்களிலெல்லாம் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட வரலாற்றை மாற்றி,

முஸ்லிம்களின் வாக்குகளால் தமிழன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டான் என்கிற வரலாற்றை ஆகஸ்ட் 17ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் உணர்வார்கள்.

ஏன் இதனை நான் ஆணித்தரமாக கூறுகின்றேன் என்றால், இம்முறை காத்தான்குடியிலே அளிக்கப்படுகின்ற 25,000 வாக்குகள் பல கூறுகளாக பிரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றது. காத்தான்குடியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபல வேட்பாளர்களான சிப்லி பாறூக் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் அப்துர் ரஹ்மானும் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுகின்றார்கள்.

எனவே மேற்குறித்த வாக்குகளிலே இவர்கள் இருவருக்கும் கணிசமான வாக்குகள் பிரிபடும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இதனால்தான் நான் குறிப்பிடுகின்றேன்;; இம்முறை நிச்சயம் என்னுடன் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளரை விட அதிகப்படியான வாக்குகளை நான் பெற்றே தீருவேன்.

அது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். இருந்தும்கூட மக்களை ஒரு குழப்ப நிலைக்கு இட்டுச்செல்ல முயற்சிக்கினறார்கள். மக்கள் இம்முறை மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் சில கிராமங்களுக்குச் செல்ல முடியாத சூழல்கூட இத்தேர்தலிலே ஏற்பட்டிருக்கிறது. எனவே மக்களிடமிருந்து விலக்கப்பட்ட வேட்பாளர்களாகவே

இவர்கள் தற்போது வலம் வருகிறார்கள்.
எனவே கடந்த காலங்களைப்போல் அடைய முடியாத இலக்குகளையும், சாத்தியமற்ற விடையங்களையும், நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகளையும், போலிப்பிரச்சாரங்களையும் மக்கள் மத்தியிலே முன்வைத்து வாக்கு கேட்ட வரலாற்றை மாற்றி; உண்மையாகச் செய்யக்கூடியவற்றை மக்களிடம் தெரிவித்து அன்படி வாக்கு கேட்டு வெற்றி பெற வாழ்த்துவதோடு, எமது மாவட்டத் தமிழ் மக்களைப் போலிப் பரப்புரைகள் செய்து மீண்டும் அகலபாதாளத்திற்கு கொண்டு செல்லாதீர்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin