ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் முத்துசப்புரபவனி !

சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 64வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம்  எங்கும் மேல் ஒங்க​ இசை, நடனம், பரதம், கூத்து, கும்மி என்பன​ ஆரவாரிக்க​ அடியவர்கள் பஜனை பாடிட​ சித்தர் முத்து சப்புர பவனியானது ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவ​ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்ப​மாகி சூரிய, சந்திரன் வரவேற்க, காண்டா மணி ஒலிக்க, நந்திவாகனத்தில் அமர்ந்திருந்து நந்தி பெருமான் வழிகாட்ட காரைதீவின் தேரோடும் வீதி வழியாக​ பவனிவந்தன. இதன்போதான படங்களை காணலாம்.

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் குருபூசையானது எதிர்வரும்  24ம் திகதி வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin