கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்ததையிட்டு மனம் வருந்துகின்றோம்.
அவர்கள் தந்தை செல்வா கொள்கையுடன் இலங்கை தமிழரசுக்கட்சியின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பனித்து தனது இறுதி மூச்சுவரை தமிழரின் விடிவை நோக்கிய பயணத்துடன் ஒன்றாக இருந்து செயற்பட்டு வந்ததோடு கல்முனை மாநகரசபையில் எதிர்கட்சி தலைவராக, கல்முனைத் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி தலைவராக எமது மக்களுக்காக பணியாற்றிய கொள்கைவாதி இன்று ஓய்வு பெறுகிறார்.
தமிழருக்கு ஏற்படும் அநீதிகளை அவ்வப்போது சபையில் தட்டிக்கேட்க ஓங்கி ஒலித்த குரல் இன்று மௌனிக்கிறது. இது கல்முனைப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல எமது இனத்துக்கே ஒரு பெரிய இழப்பாகியுள்ளது.
இவர் எமது கட்சியில் வைத்திருந்த பற்றுறுதி, நம்பிக்கை இவற்றை நாமும் ஏற்று இவர் விட்டுச் சென்ற பணிகளையும் கொள்கையையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதே இவரது ஆத்மசாந்திக்காகாக நாம் செய்யும் பணியாகும்.
அன்னாரது துயரத்தில் நாமும் பங்கு கொண்டு ஆத்மசாந்திக்காய் வேண்டுகின்றோம்.
நன்றி