கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் புகையிரதப் பாதையில் வழமையாக கும்மாளமடித்து இரவுப் பொழுதைக் கழிக்கும் ஏறாவூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற பயணிகள் புகையிரதம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு மட்டக்களப்பை நோக்கிப் புறப்பட்ட ஒரு சில நிமிட நேரத்தில் இந்த விபத்து சம்பவித்தது.
படுகாயமடைந்தவர்களில் ஒருவரான ஹுஸைன் முஹம்மது தமீம் (வயது 17) என்ற இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்; அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமயம் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை மரணமானார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் வியாழனன்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment