அம்பாறை சந்தைக்கட்டடத்தொகுதி நேற்று நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததில் கடை ஒன்று பலத்த சேதத்துக்குள்ளாகியது.
இதனால் அக்கடையில் இருந்த ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவற்றுறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அருகில் இருந்த உப தபால் நிலையம் உள்ளிட்ட சில வியாபார நிலையங்களும் தீயினால் சிறிய பாதிப்புக்ககுள்ளாகியன.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகேயின் நடவடிக்கையின் பிரகாரம் தீயணைப்பு பிரிவினருடன் காவற்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதனால் அருகில் இருந்த கடைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.