யானை தாக்குதலில் நபர் ஒருவர் பரிதாப பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை யானை தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெல்லாவெளி, புத்தடிமேடு பகுதியில் வைத்து யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம்(62வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin