உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடையமுடியாது!

“உண்­மையை மறைத்து நல்­லி­ணக்­கத்தை ஒரு­போ­தும் அடைய முடி­யாது. பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­பதை முழு­மை­யாக அறி­ய­வேண்­டும். அது வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­த­வரை நாட்­டில் நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டாது”
இவ்­வாறு எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். பலவந்தமாகக் காணா­மல் ஆக்­கப்­பட்­டோருக்கான உலக தினத்தை முன்­னிட்டு கொழும்பு விகா­ர­மா­தேவி பூங்­கா­வில் நேற்று மாலை 4 மணிக்கு நடை­பெற்ற கூட்­டத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
2009ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரும் பின்­ன­ரும், பல ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்­கள். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை மீட்க அவர்­க­ளின் நெருங்­கிய அன்­புக்­கு­ரிய உற­வு­கள் போராடி வரு­கின்­றார்­கள். இது சாதா­ரண விட­ய­மல்ல. மிகப் பார­தூ­ர­மான விட­யம்.
தெற்­கில் 1989ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் பல ஆயி­ரக் கணக்­கா­னோர் காணா­மல் ஆக்­கப்­பட்­டார்­கள். இந்த நாட்டு மக்­கள் அப்­போது இந்த விட­யத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தி­ருந்­தால், சில வேளை­க­ளில் 2009ஆம் ஆண்டு நடந்­தவை நடக்­கா­மல் விட்­டி­ருக்­கக் கூடும்.
தாங்­கள் விரும்­பி­ய­வற்­றைச் செய்­து­விட்டு சட்­டத்­தின் முன்­னால் செல்ல வேண்­டிய தேவை­யில்லை, எத­னை­யும் செய்து விட்­டுத் தப்­பி­வி­ட­லாம். அதற்­குப் பொலிஸ், இரா­ணு­வம், அரசு உத­வும். எமக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­மாட்­டார்­கள் என்ற நிலை மாற வேண்­டும்.
அந்­தத் துணிவு அகற்­றப்­பட வேண்­டும். அது இல்­லா­மல் செய்­யப்­பட்­டால்­தான் நாட்­டில் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் இல்­லா­மல் போகும்.
நாட்­டில் அனை­வ­ரும் ஏற்­கக் கூடிய அர­ச­மைப்பு உரு­வாக வேண்­டும். அப்­போ­து­தான் நாட்­டில் அமை­தி­யாக எல்­லோ­ரும் வாழ முடி­யும்.
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வும் சட்­டம் கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. அது இன்­ன­மும் நடை­மு­றைக்கு வர­வில்லை. அந்த அலு­வ­ல­கம் நிறு­வப்­பட வேண்­டும். சட்­ட­ரீ­தி­யான செயற்­பா­டு­கள் இடம்­பெற வேண்­டும். அத­னூ­டாக குற்­ற­வா­ளி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டும்.
பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளில் எல்­லோ­ரும் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­கள் என்று கூற­வில்லை. பலர் உயி­ரு­டன் இல்­லா­மல் இருக்­க­லாம். நிலமை எப்­ப­டி­யாக இருந்­தா­லும் நாம் உண்­மையை அறி­யா­மல் இருக்க முடி­யாது.
காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது தொடர்­பில் உண்­மை­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும். இந்­தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தாக இலங்கை அரசு ஐ.நா.வுக்கு வாக்­கு­றுதி அளித்­துள்­ளது. இதற்­கான சகல நட­வ­டிக்­கை­யும் எடுப்­போம் என்று கூறி­யுள்­ளது.
ஆனால் அதனை நிறை­வேற்­ற­வில்லை. பன்­னாட்­டுச் சமூ­கம் இதில் மிக­வும் கவ­ன­மாக இருக்­கின்­றது. நாம் பல முனை­க­ளில் போராட வேண்­டும் என்று கேட்­கின்­றேன். நாமும் பல வழி­க­ளி­லும் அழுத்­தங்­க­ளைக் கொடுத்து வரு­கின்­றோம். நாம் அனை­வ­ரும் பன்­னாட்­டுப் பங்­க­ளிப்­பு­டன் வெற்­றி­ய­டை­வோம். எமது அனைத்து முயற்­சி­க­ளை­யும் சன­நா­யக ரீதி­யில் முன்­னெ­டுக்க வேண்­டும் – என்­றார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin